உசிலம்பட்டி அருகே இடத்தகராறில் முதியவர் கொலை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (65). விவசாயியான இந்த முதியவருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான பாலமுருகன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை தொடர்பாக தகராறு இருந்து வந்தாக கூறப்படுகிறது.நேற்று இரவு வழக்கம் போல் தகராறு ஏற்பட்டு முற்றிய நிலையில் ஈஸ்வரனை பாலமுருகன் கீழே தள்ளி விட்டுள்ளார்.இதில் ஈஸ்வரன் தலையில் படுகாயமடைந்து ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து விரைந்து வந்த உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலிசார் போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஈஸ்வரன் உடலை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு முதியவரை கொலை செய்த பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!