உசிலம்பட்டி அருகே நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேல மாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்தாய்(65).இவர் தனது வீட்டிலிருந்து மாதரையில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இதேபோல் உசிலம்பட்டி அருகே அருணாச்சலம்பட்டியில் தெருவில் நடந்து சென்ற பாலகன்(70) மீது அவ்வழியாக சென்ற கார் எதிர்பாராதவசம்பவ இடத்திலேயே பலியானார்.இது தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல்நிலையப் போலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!