உசிலம்பட்டியில் தடையை மீறி தேவர்சிலைக்கு மாலை அணிவித்த பாஜ தலைவர்.

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனை தொடர்பாக தேனி ஆட்சியர் அலுவலகம் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக தேனி செல்லும் வழியில் பாஜ தலைவர் அண்ணாமலை உசிலம்பட்டிக்கு வந்தார்.உசிலம்பட்;டி தேவர் சிலை முன்பாக பாஜ கட்சியினர் அவருக்கு சால்லை அணிவித்தனர்.காரிலிருந்து இறங்க முயன்றவரை போலிசார் உங்கள் நிகழ்ச்சி நிரல் இங்கே இல்லை எனக்கூறியதால் வண்டியில் ஏறினார்.ஆனால் பாஜ கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வற்புறுத்தியதால் போலிசாரின் தடையை மீறி காரிலிருந்து இறங்கி தேவர் சிலை மற்றும் மூக்கையாத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தேனி சென்றார்..இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!