ஊரணியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் கிராமத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தில், ஊரணியில் மூழ்கி ஒன்பது வயது ரோஷினி மற்றும் பதினொரு வயது பிரசன்னியா ஆகிய இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.

அருகருகே உள்ள வீடுகளில் வசிக்கும் இந்த இரண்டு சிறுமிகளும் குளிக்கச் சென்று வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களைத் தேடத் தொடங்கினர். ஊரணியின் கரையில் குளிப்பதற்கான பொருட்கள் (வாளி, துண்டு, சோப்பு டப்பா, செருப்பு) கண்டெடுக்கப்பட்டதால், ஊரணிக்குள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே, கிராம மக்கள் ஊரணிக்குள் இறங்கித் தேடி, இரு சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவாடானை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளின் இந்த அகால மரணம் பெரியகீரமங்கலம் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!