பல்கலைக் கழக தேர்வு கட்டண உயர்வு விவகாரம்.3வது நாளாக மாணவா்கள் போராட்டம்.

திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் 3 ஆவது நாளாக, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநில துணை செயலாளர் க.நிருபன், மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் விஜய், நூர்ஜகான், திலகவதி, ஏ.கணேஷ், ஜெய்சங்கர், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ந.அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வரும் 23 ஆம் தேதி பல்கலைகழகத்தை மாணவர்கள் முற்றுகையிட உள்ளதாக மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!