தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம்,இனி வரும் காலங்களில் ஈடேறாது!- தவெக தலைவர் விஜய்…

எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறாது – தவெக தலைவர் விஜய்.

2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், அதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றனர்.

தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது, மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என சொல்கின்றனர்.

இது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது – தவெக தலைவர் விஜய் X தளத்தில் பதிவு.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!