பத்ராதரவா கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பத்ராதரவா கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தென்னை நார் கழிவு உரம், மற்றும் மண் புழு உரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி வேளாண்மை இயக்குநர் செல்வம் கலந்து கொண்டு தென்னை நார் கழிவு தயாரிக்கும் முறையும் அதன் பயன்பாடுகளை பற்றியும் , தென்னை நார் கழிவு உரக்குவியல் அமைக்கும் முறைகளை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். தொடந்து தென்னையில் தாக்கம் காண்டாமிருகவண்டு கட்டுபடுத்தும் முறைகள் குறித்தும் , முக்கிய தென்னை நார் கழிவின் பயன்களின் விளக்கத்தை கள அலுவலர் முருகானந்தம் எடுத்துரைத்தார். மேலும் துணை வேளாண்மை அலுவலர் சையது முஸ்தபா மண்புழு உரம் தயாரித்தல் மக்க கூடிய கழிவுகளை சேகரித்தல் மண்புழு உர படுக்கை தயாரித்தல், குறித்து விளக்கம் அளித்தார் . இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!