இராமநாதபுரம், நவ.5-
இராமநாதபுரம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை
விற்பனைக்குழு சார்பில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை சார்ந்த தொழில்நுட்ப அலுவலர்களுக்கான தேசிய மின்னணு வேளாண் சந்தை (e-NAM) பண்ணை முறையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் பயிற்சி நடந்தது. ராமநாதபுரம் வேளாண் துறை இணை இயக்குநர் சரஸ்வதி, தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குநர் ஆ.பாஸ்கர மணியன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் பொ.ராஜா வரவேற்றார். அவர் பேசுகையில், வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேளாண் விற்பனைக்குழு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் உள்ள திட்டங்களை எடுத்துரைத்தார். தோட்டக்கலைத் துணை இயக்குநர்(பொ) குமார் சிறப்புரையாற்றினார். e-NAM திட்டம் குறித்து e-NAM திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்டான்லி பயிற்சி அளித்தார். e-NAM திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள் தங்களின் வெற்றிக்கதைகளை எடுத்துக்கூறினர். வேளாண், தோட்டக்கலை துறை அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், துணை உதவி வேளாண் அலுவலர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண் வணிக வேளாண் அலுவலர் உலகுசுந்தரம் நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









