தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ், குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்’ உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை- நாகர்கோவில், நாகர்கோவில் – கோவை, -எக்ஸ்பிரஸ் ரெயில்கள், நாளை (1-ந்தேதி) மற்றும் 6, 8, 11, 13, 15 ஆகிய தேதிகளில் விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், திருமங்கலம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாது.
மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில், நாளை (1-ந்தேதி) மற்றும் 9, 11, 15 ஆகிய தேதிகளில், திருச்சி, காரைக்குடி, விருதுநகர் வழியாக மாற்றுப் பாதையில் செல்வதால், திண்டுக்கல், மதுரை செல்லாது.
நாகர்கோவில் – தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா ரெயில், நாளை (1-ந்தேதி) மற்றும் 8, 15 ஆகிய தேதிகளில், விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது.
குஜராத் -ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற 4, 11 ஆகிய தேதிகளில் மாற்றுப்பா தையில் இயக்கப்படுவதால், திண்டுக்கல், மதுரை செல்லாது.
மதுரை – ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற 6, 13 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் செல்வதால், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாது.
நாகர்கோவில் – மும்பை சி.எஸ்.டி. ரெயில், வருகிற 11-ந்தேதி மட்டும் மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது.
குருவாயூர் – சென்னை எழும்பூர் இடையேயான இரவு 11.15 மணி ரெயில், வருகிற 10-ந்தேதி மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாது.
உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற 9-ந்தேதி மாற்றுப்பாதையில் செல்வதால், திண்டுக்கல், மதுரை செல்லாது.
மதுரை – சென்னை எழும்பூர் தேஜஸ் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில், நாளை (1-ந்தேதி) மற்றும் 8, 11, 15 ஆகிய தேதிகளில், 45 நிமி டங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

