இராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயிலில் படியில் பயணம் செய்தவரின் கால் இரண்டாக முறிந்தது..

இராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயில் படிக்கட்டில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பரமக்குடி ஸ்டேஷனில் நுழைந்த போது நடைமேடையில் ரயில் படிக்கட்டு உரசியதில், பரமக்குடியை சேர்ந்த 26 வயது வாலிபர் கால்கள் சிக்கியது.

இதில் இரண்டு கால்கள் முறிந்தன. ஆம்புலன்ஸ் மூலம் அவர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!