மதுரையில் வெவ்வேறு ரயில் விபத்தில் இருவர் பலி..

மதுரையில் இன்று (11/07/2019) வெவ்வேறு ரயில் விபத்தில் சிக்கி இருவர் பலி ஆகியுள்ளன்னர். மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் இணைக்கும் ரயில்வே தண்டவாளத்தில் ரமேஷ் வயது (50) மதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதே போல் மதுரை திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோயில் அருகே தண்டவாளத்தை கடக்கும் பொழுது சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ரயில் மோதிய விபத்தில் பலியாகியுள்ளார். இது தொடர்பாக மதுரை ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!