பாம்பன் ரயில் பாலக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால், ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்பட ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிநது. மாலை வேளையில் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கிறது. இதனால், பாம்பன் கடல் பாலத்தில் ரயில்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. பயணிகளின் நலன் கருதி ராமேஸ்வரத்தில் இருந்து மாலை நேரத்தில் புறப்படும் ரயில்களை மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படிஇன்று (05.8.2019) மாலை 5 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் : 16852 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து கால அட்டவணை நேரப்படி புறப்படும்.மாலை 4 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் : 16780 ராமேஸ்வரம் – திருப்பதி விரைவு ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து கால அட்டவணை நேரப்படி புறப்படும்.மதுரையிலிருந்து நண்பகல் 12.15 மணிக்கு புறப்பட்ட வண்டி எண் : 56721 மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மண்டபம் வரை இயக்கப்படும்…மாலை 6 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 56726 ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து கால அட்டவணை நேரப்படி புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









