வேடசந்தூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து வாகனங்களின் முகப்பு விளக்கில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காவல்துறை மற்றும் வேடசந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் ஆத்துமேடு, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், பேருந்துகள் மற்றும் பலவிதமான நான்கு சக்கர வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மணிவண்ணன், வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர், சார்புஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!