தொண்டி கடலில் சிக்கிய அரிய வகை நட்சத்திர ஆமையை, மீட்டு மீண்டும் பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு குவிகிறது.
ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி புதுக் குடியை சேர்ந்த மீனவர் ராமகிருஷ்ணன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் தொண்டி புதுக்குடி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் 15 கிலோ எடை கொண்ட அதிசய நட்சத்திர ஆமை ஒன்று சிக்கியது.
உடன் அதை பத்திரமாக வலையில் இருந்து எடுத்து உயிருடன் கடலில் மீண்டும் விட்டனர். தடை செய்யப்பட்ட கடல் ஆமையை பத்திரமாக மீட்ட மீனவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் சன்மானம் வழங்கப்படும் என கடலோர காவல்துறையினர் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.