வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டது தங்கம் விலை! அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் நகை பிரியர்கள்..

சென்னையில் இன்று (மார்ச் 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த மார்ச் 12ம் தேதி செவ்வாய் கிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,520க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (மார்ச் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இன்றும் (மார்ச் 14) தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது வரலாறு காணாத அளவில் புதிய உச்சமாகும்.

தங்கம் விலை கடந்த 3 தினங்களில் மட்டும் 1,680 அதிகரித்து இருப்பது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!