சிரியாவில் நடைபெறும் படுகொலையை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்…

சிரியா நாட்டில் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக உள்நாட்டு போர் என்ற பெயரில் கொல்லப்பட்டு வருவதை மனிதாபிமானம் உள்ள அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவில் உள்ள ஜாதி, பேதமின்றி மனிதாபிமானம் உள்ள அனைவரும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். பிஞ்சுக்_குழந்தைகள் உட்பட அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் சிரியா, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளின் காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டித்தும், இப்பிரச்சனையில் உடனடியாக ஐநாதலையிட்டு, தீர்வு காண வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டான அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடைபெற்றது.

இந்தக் கண்டன போராட்டத்தில் தலைவர்கள் கண்டன உரையுடன் கோஷங்கள் எழுப்பினர். இப்போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!