இராமநாதபுரத்தில் TNPSC தேர்வு இலவச பயிற்சி..

மத்திய மாநில SC / ST அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு – சார்பில் இராமநாதபுரத்தில் TNPSC குருப்-2 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது, மாநிலத் தலைவர் ச.கருப்பையா, உதவி ஆணையர் வணிகவரி தொடங்கி வைத்தார். பயிற்சி மைய முதல்வர் ச.இரவீந்திரன், துணை முதல்வர், எஸ்.ஆர். காளிதாஸ், ஒருங்ணைப்பாளர் எஸ்.முருகவேலு, மற்றும் அலுவலர்கள், பி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ. இராமர், க.இரவி பயிற்றுநர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இதில் அனைத்துப் பட்டதாரிகளும் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டது.கடந்த முறை குரூப் IV தேர்விலும், போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா செப்டம்பர் மாதம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. செய்தி தொடர்பாளர் தங்கவேலு நன்றி கூறினார். நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராக வை சந்தித்து வாழ்த்து தெரிவித்து புத்தகம் பரிசளித்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம். ————/—-/———————/—————————

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!