தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு இலவச மாட்டு தீவனம் வழங்கும் நிகழ்ச்சி…

தஞ்சாவூர் மாவட்டம் ,தஞ்சாவூர் ஒன்றியம், ஆலக்குடி கிராமத்தில் சில்ரன் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சார்பாக கால்நடை உரிமையாளர்களுக்கு இலவசமாக கால்நடை மாட்டு தீவனம் வழங்கப்பட்டது,

இந்நிகழ்ச்சிக்கு ஆலக்குடி கிராமத்தின் கால்நடை உதவி மருத்துவ அலுவலர் த சுகன்யா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மாட்டுத்தீவனம் வழங்கினார் .

இந்நிகழ்ச்சியில் ஆலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாட்டுத் தீவனம் வாங்கி சென்றனர் .

கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடை மாட்டு தீவனம் வழங்கும் நிகழ்ச்சியை சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

செய்தி ஏ.கே.சுந்தர், தஞ்சாவூர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!