தஞ்சாவூர் மாவட்டம் ,தஞ்சாவூர் ஒன்றியம், ஆலக்குடி கிராமத்தில் சில்ரன் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சார்பாக கால்நடை உரிமையாளர்களுக்கு இலவசமாக கால்நடை மாட்டு தீவனம் வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சிக்கு ஆலக்குடி கிராமத்தின் கால்நடை உதவி மருத்துவ அலுவலர் த சுகன்யா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மாட்டுத்தீவனம் வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் ஆலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாட்டுத் தீவனம் வாங்கி சென்றனர் .
கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடை மாட்டு தீவனம் வழங்கும் நிகழ்ச்சியை சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி ஏ.கே.சுந்தர், தஞ்சாவூர்.
You must be logged in to post a comment.