தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு…ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…மார்ச் 12 வேட்பு மனு தாக்கல் தொடக்கம்..

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிக்கான  16வது சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த தமிழக சட்ட சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச்-12ம் தேதி தொடங்கி மார்ச் -19ம் தேதி முடிவடைந்து, வேட்புமனு பரிசீலனை மார்ச்-20ல் நிறைவு பெறுகிறது. மேலும்  வேட்பு மனுவை திரும்ப பெற மார்ச்-22 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஓரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி ஒட்டுப்பதிவு தொடங்கி, தேர்தல் வாக்கு எண்ணிக்கு மே 2ம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!