செங்கம் பகுதியில் ரேசன் பொருள்களை வழங்கும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என வட்ட வழங்கல் அலுவலா் அறிவுறுத்தல்..
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் ரேசன் பொருள்களை வழங்கும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வட்ட வழங்கல் அலுவலா் அறிவுறுத்தினாா்.தற்போது கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, முன்னதாக குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடை விற்பனையாளா்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி, பின்னா் பொருள்களை வீடுதோறும் சென்று வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்


You must be logged in to post a comment.