செங்கம் அடுத்த அமர்நாதபுதூர் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஸ்ரீதேவி தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் மற்றும் அரசின் நல்ல திட்டங்களைப் பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ஸ்ரீதேவி 205.பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், அரசு உதவித்தொகை பெறும் ஆணை போன்ற பல்வேறு நலத்திட்ட சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். இந்த முகாமில் செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, சபாதி வட்டாட்சியர் சுகுணா, வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர், கிராமநிர்வாக அலுவலர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள் இவர்களுடன் அலுவலக உதவியாளர்கள் பங்கேற்று முகாம் பணிகளை மேற்கொண்டார்கள்.
செய்தியாளர் செங்கம் சரவணக்குமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









