புதுப்பாளையம் ஒன்றியத்தில் 3 ஆயிரம் பேர் எம். எல். ஏ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்..

புதுப்பாளையம் ஒன்றியத்தில் 3 ஆயிரம் பேர் எம். எல். ஏ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளிலிருந்து திமுக மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து 3000 பேர் கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருமான பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுக வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். கட்சியில் புதியதாக சேர்ந்தவர்கள் உறுப்பினர் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார். அவர்களுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும் கலசப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான பன்னீர்செல்வம் சால்வை வேட்டிகள் அணிவித்து வாழ்த்தினார் கொரானா நிவாரண உதவிகளை தமிழக அதிமுக அரசு பாரபட்சமின்றி வீடு வீடாக அனைவருக்கும் வழங்கியது.

தனிப்பட்ட முறையிலும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கிராமந்தோறும் நிவாரண உதவிகளை பல கட்டமாக கணக்கின்றி அனைவருக்கும் வழங்கினார்.

2021லும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என புதியதாக கட்சியில் இணைந்தவர்கள் தெறிவித்தனர். நிகழ்சியில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி மாவட்ட கவுன்சிலர் தவமணி, ஒன்றிய கவுன்சிலர் வக்கில் ரமேஷ் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!