செங்கம் அருகே ஆதரவற்ற இல்லத்தை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காஞ்சி தனியார் ஆதரவற்ற இல்லத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காஞ்சி பகுதியில் உள்ள தனியார் ஆதரவற்ற இல்லத்தை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனரா என்று காப்பக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் குழந்தைகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் மாணவர்கள் வெளியே சென்று வந்தால் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் ஆசிரியருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் காஞ்சி அம்மாபாளையம் அதே பகுதியில் உள்ள முடி திருத்தம் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். ஒரு கூட்டுறவு சங்க தலைவர் பொய்யாமொழி, புருஷோத்தமன், மாவட்ட கவுன்சிலர் தமிழ்மணி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









