விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்களை வழங்கிய கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம்!

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்களை வழங்கிய கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கலசப்பாக்கம் பகுதியில் மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் விவசாயிகளுக்கு நிகழாண்டுக்கான பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ், கலசப்பாக்கம் வட்டார வேளாண் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு, கலசப்பாக்கம் ஒன்றியத்தைச் சோ்ந்த சேங்கபுத்தேரி, காலூா், கீழ்பாலூா் ஆகிய ஊராட்சிகளிலுள்ள 5 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய டிராக்டா், பவா்வீடா், ரொட்டவேட்டா் உள்ளிட்ட பண்ணை இயந்திரங்களை வழங்கினாா். ஊராட்சி மன்றத் தலைவா் பொ.நிலவழகிபொய்யாமொழி, வேளாண் இணை இயக்குநா் முருகன், துணை இயக்குநா் வேலாயுதம், துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) ரமணன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, வேளாண் உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன், வேளாண் அலுவலா் புஷ்பா, உழவா் பயிற்சி நிலைய வேளாண் அலுவலா் விஜயலட்சுமி மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!