ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஆதி ரத்தினேஸ்வரர் சுவாமி, அருள்மிகு சினேகவல்லி அம்பாள் உடனமைந்து கோவிலில் ஆடிப்பூர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 8-ம் நாள் விழா இன்று விழாவூர்வாக நடைபெற்றது. இதில், முன்னதாக விநாயகர் மூஞ்சூறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பின்னர், அருள்மிகு சினேகவல்லி அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வீதி முழுவதும் பக்தர்கள் உற்சாகமாக வரவேற்று, பூஜைகள் செய்து பக்திபூர்வமாக வழிபட்டனர். 22 ½ நாட்டார்கள் அம்பாளின் வாகனத்தை இழுத்து வீதியுலாவிற்கு அழைத்து வந்து கோவிலில் ஒளிவிழாவாக கொண்டுவந்தனர்.
இன்று மாலை 3 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி தேரோட்டம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment.