ஆண்டிபட்டி அருகே அழகாபுரி கிராமத்தில் மயான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி ஊராட்சியில் அழகாபுரி கிராமம் உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட வர்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கான மயானம் கிழக்குப் புறத்தில் அமைந்துள்ளது. ஆனால் மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளதால் பாதை சுருங்கி குறுகலாக காணப்படு கிறது. இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் போது மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் மயான சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலையும் உருவாகியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை வலியுறுத்தியும் , இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அழகாபுரி கிராமத்தில் மயான சாலை செல்லும் பாதையை சீரமைத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!