தேனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நாடு முழுவதும் தொடரும் ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் தலைமை தாங்கினார், தேனி மேற்கு மாவட்ட செயலாளர் சோ.சு.சுருளி முன்னிலை வகித்தார். மாநில துணைச் செயலாளர் ஆதிமொழி கண்டன உரை நிகழ்த்தினார். தமிழன், கோமதி ஆனந்தராஜ், கனி மனோகரன், சிவநேசன், பாஸ்கரன், இளமதி, முத்துமாணிக்கம், ஜெகநாதன் உட்பட மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் , முகாம் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தேனி நகர செயலாளர் ஈஸ்வரன் நன்றியுரை வழங்கினார்.

. சாதிக் பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!