பெரியகுளத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ..

தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கொரானா காலத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். மேலும் சட்டக் கூலி யை உயர்த்தி வழங்க வேண்டும். பேரூராட்சி நகராட்சிகளுக்கு 100 நாள் வேலையை விஸ்தரிக்க வேண்டும் எனவும் கொரானா நிவாரண நிதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 7500/ வழங்க வேணடும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பெரியகுளம் வட்டாட்ச்சியர் அலுவலகம் முன்பு  இளங்கோவன் (வி.தொ.ச.தாலுகா தனலவர்) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் M.இராமச்சந்திரன் (CITU மாவட்ட செயலாளர்) G முத்துக்கிருஷ்ணன் (வி.தொ.ச.தாலுகா செயலாளர்), S வெண்மணி (AIDWA மாவட்ட செயலாளர்) A.பழனு (வி.ச.தாலுகா தலைவர்) A. மன்னர் மன்னன் (வி.தொ.ச.தாலுகா பொருளாளர்) P பிரேம்குமார் (SFI மாவட்ட தலைவர்) செளந்தரரபாண்டி (DYFI தாலுகா செயலாளர்) G சுப்பிரமணி (தென்கரை சிபிஎம் .கிளை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

 சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!