பொறியாளர் வீட்டில் ரூ.1.88 லட்சம் நகை திருட்டு…

இராமநாதபுரம் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 56. இவர் வழுதூர் மின் உற்பத்தி நிலையத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி வேலைக்குச் சென்ற இவர் மதியம் வீடு திரும்பினார் . அப்போது வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டு கிபந்த்து. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகை, வைரத்தோடு, 2.50 கிலோ வெள்ளி பொருட்கள், கடிகாரம் 3 , எல் இ டி டி.வி, உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது கண்டு திடுக்கிட்டார். இதன் மதிப்பு ரூ.1.88 லட்சமாகும்.

சம்பந்தப்பட்டவரின் புகார் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!