தமிழகத்தில் பல் வேறு பகுதிகளில் டிப்-டாப் உடை அணிந்த சிலர் நூதன முறையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
சமீபத்தில் இராமநாதபுரம் அருகே கைவரிசை காட்டிய இலங்கை யாழ்ப்பாணம் ராஜன் என்ற பாண்டியன்(32), இவரது மனைவி ரூபா(25), நிஜந்தன் (24) ஆகியோரை ராமநாதபுரம் கியூபிரிவு போலீசார் நகைகளுடன் கைது செய்தனர். கேணிக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனார். இவர்கள் திருச்சி அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் என தெரிய வருவதால் திருச்சி போலீசார் விசாரணைக்காக இராமநாதபுரம் வரவுள்ளனர்.



You must be logged in to post a comment.