குடியாத்தம் பகுதியில் திருட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை இருசக்கர வாகனங்கள் திருட்டு வழிப்பறி ஆகிய குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனிடையே  நேற்று  குடியாத்தம் நகர காவல்துறை ஆய்வாளர் இருதயராஜ் வர்களுக்கு வந்த ரகசிய தகவல் அடிபடையில் நகர ஆய்வாளர் இருத்யராஜ் அவர்களின்  தலைமையில் வேலூர் சாலை அம்பேத்கர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அபோது  சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனத்தில் வந்த  மூன்று பேரை பிடித்து விசாரணை செய்ததில்  அவர்கள் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு புகுந்து திருட்டு இருசக்கர வாகனங்களை  திருடிய சுகுமார்,  யுவராஜ், மோகன் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து  அவர்களிடமிருந்து 30 சவரன் நகை,  அரை கிலோ வெள்ளி,  6 இருசக்கர வாகனங்கள்,  பத்தாயிரம் ரூபாய் ரொக்கம்,  4 செல்போன்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.  இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே கொலை, கொள்ளை  வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!