கீழக்கரை தாலுகாவில் கடந்த ஒரு மாதமாக அரசின் முதியோர் உதவித் தொகை பெறுவோர் பற்றிய விசாரனை நடந்து வருகிறது. இவ்விசாரானையில் பல தகுதியில்லாத நபர்கள் போலியான விபரங்களுடன் உதவித் தொகை பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் உதவித் தொகை ரத்து செய்யப்பட்டது. இந்நடவடிக்கை மூலம் தகுதியுள்ளவர்கள் உதவித் தொகை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் தொடர்ச்சியாக 08-06-2017 அன்றும் தாசில்தார் தமீம்ராசா தலைமையில் கீழக்கரை வட்டம் திருஉத்திரகோசமங்கை, குளபதம் குரூப் நத்தம் கிராமம் ஆகிய பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம் அருகே டிக்கடை நடத்தும் நபர், மாவு ஆலை நடத்தி வரும் நபர் ஆகியோர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









