தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் இணைந்து சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர். பிரேமலதா சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஜெஸ்லின் தலைமையில், உறைவிட மருத்துவர் செல்வபாலா, பல் மருத்துவர் லதா மற்றும் மூத்த மருத்துவர்களின் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலக நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இணை இயக்குனர் நலப்பணிகள், மருத்துவமனை கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவர், நிர்வாக அலுவலர், மூத்த மருத்துவர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்புணர்கள், இணை இயக்குனர் அலுவலக பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என சுமார் 350 பேர் கலந்து கொண்டு பொங்கலிட்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் (ART Center) கூட்டு மருந்து சிகிச்சை மையத்தில் பணியாற்றும் பணியாளர்கள், NGO பணியாளர்கள் மற்றும் நோயாளிகளும் கலந்து கொண்டனர்.




இந்நிகழ்வில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சுமார் 30 பேருக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக காய்கறிகள் நிறைந்த பொங்கல் பரிசு பைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் அனைத்து பணியாளர்களுக்கும் நடத்தப்பட்டது. அதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் முதல் அனைத்து மருத்துவர்கள், பணியாளர்களும் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாடினர். விளையாட்டு நிறைவு பெற்ற பின் மதியம் அறுசுவை உணவும், பொங்கலும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 2024 பொங்கலின் சிறப்பு அம்சமாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்திலும் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் காய்கறிகள் நிறைந்த பொங்கல் பரிசு பைகள், மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக இணை இயக்குனர் நலப்பணிகள் மூலம் வழங்கப்பட்டது. இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா, நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. இரா. ஜெஸ்லின் ஆகியோர் சமத்துவ பொங்கலின் சிறப்புகளை மேற்கோள்காட்டி அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பாக, போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









