தென்காசி மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத் துறையின் மூலம் 2024-2025 கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் (Career Guidance) ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாணாக்கர்கள் கலந்து கொண்டு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.
தென்காசி வட்டத்தில், ஆதிதிராவிடர் இன மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டு 12 ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் (Career Guidance) ஆலோசனை முகாம் ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் Mass Movement for Transformation (MMT) and NURTURE என்ற தன்னார்வ இயக்கம் பிற தன்னார்வ இயக்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் முதற் கட்டமாக (29.03.2025) (30.03.2025) மற்றும் (05.04.2025) (06.04.2025) முதல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழிகாட்டும் ஆலோசனை (Career Guidance) வழங்கப்பட உள்ளதால் மாணாக்கர்கள் ஆலோசனை முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். தென்காசி அரசு இ.சி.ஈ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கூட்டரங்கில் (06.04.2025) அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் உயர்கல்வி வழிகாட்டுதல் (Career Guidance) ஆலோசனை முகாமில் மாணாக்கர்கள் கலந்து கொண்டு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.