தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2,29,500 மதிப்பிலான காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2025 திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பெற்றுக் கொண்டார்.



தொடர்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி தலா ரூ.8500 வீதம் மொத்தம் ரூ.2,29,500 மதிப்பிலான காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார். மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 654 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனு தாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச் சந்திரன், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்து ராமலிங்கம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயப் பிரகாஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்புலெட்சுமி, மாவட்ட துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்