உலக சாதனை விருது பெற்ற நான்கு மாத குழந்தை; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..

ஐந்து உலக சாதனை விருதுகளை பெற்று சாதனை படைத்த நான்கு மாத குழந்தைக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசியை சேர்ந்த தம்பதியினரின் லயா என்ற குழந்தையானது தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த குழந்தையிடம் இரண்டு புகைப்படங்களை காட்டி அதில் உள்ள பெயர்களை சொல்லி எடுக்க சொல்லும் போது சரியாக எடுத்தும், உலக அதிசயங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புகைப்படங்களை காண்பித்து குறிப்பிட்ட பெயரை சொல்லும் போது அந்த குழந்தை சரியாக கார்ட்டை எடுத்தும் சாதனை படைத்துள்ளது. 

4 மாத குழந்தையான லயாவின் சாதனைக்கு அமெரிக்கா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட், நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரிக்கார்ட், வோர்ல்ட் வைட் புக் ஆஃப் ரிக்கார்டில் இரண்டு விருதுகள், இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்ட் விருது உள்ளிட்ட ஐந்து உலக சாதனை விருதுகள் கிடைத்துள்ளது. இந்நிலையில், அந்தக் குழந்தையை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சிறுமியின் நுண்ணறிவு திறனை மென்மேலும் வளர்க்கும் வகையில் சிறுமிக்கு உறுதுணையாக இருக்க சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!