Grindr App உள்ளிட்ட ஆன்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பொது மக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், Google Play Store – Grindr (Gay Chating App) என்ற செயலி (Application) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில் முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியின் மூலம் சில நபர்கள் குற்ற நோக்கத்துடன் பொதுமக்களை குறிப்பாக இளம் வயதினரை குறி வைத்து ஏமாற்றி ஆசை வார்த்தைகளைக் கூறி தனிமையில் சந்திக்கத் தூண்டி குற்ற செயல்களில் ஈடுபட வைத்து அதன் மூலம் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வழிப்பறி செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இது போன்று கிடைக்க பெற்ற புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் 28.09.2024-ஆம் தேதி மேற்படி Grindr App மூலம் ஒருவரை சுரண்டை காவல் நிலைய பகுதிக்கு வரவழைத்து அவரை தாக்கி பணம், செல்போன் மற்றும் நகைகளை பறித்து சென்றது சம்பந்தமாக சுரண்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து விசாரணையில் சரித்திர பதிவேடு போக்கிரி மற்றும் சம்பந்தப்பட்ட 9 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள ஒரு குற்றவாளியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பொதுமக்களும் இது போன்ற குற்ற செயல்புரியும் எண்ணத்தோடு சமூக வலைதளங்கள், பிற தகவல் ஊடகங்கள் ஆகியவற்றிலும் தங்களை அணுகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற ஏமாற்று செயலின் மூலம் பாதிக்கப்படாமல் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோன்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் புகார் கொடுக்க தயங்காமல் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க மாநில காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் 100, அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 98840 42100 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டோ அல்லது வாட்சப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என தென்காசி மாவட்ட எஸ்.பி V.R.ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.