தென்காசி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலையம் கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியான தென்காசி பாறையடி மேட்டு தெருவை சேர்ந்த திருமலை குமார் என்பவரின் மகனான முகமது மைதீன் @ நாகராஜன்(28). இவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.