சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை..

சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் எச்சரித்துள்ளார். சுரண்டை அருகே சுந்தரபாண்டியாபுரம் பகுதியில் போர்வை விற்க வந்த வடமாநிலத்தார் சிறுமியை கடத்தும் போது அருகிலிருந்தவர்கள் தர்ம அடி கொடுத்து அந்த நபர்களை காவல்துறை வசம் ஒப்படைத்தனர் என்பது போன்ற போலியான வதந்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பிறருக்கு பகிரவும் வேண்டாம். தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!