புளியங்குடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது; ரூ.75,000 மதிப்பிலான கஞ்சா பறிமுதல்..
புளியங்குடி அருகே சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.75,000 மதிப்பிலான 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நடைபெற்ற அதிரடி சோதனையில், மார்ச்.12 அன்று புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 6 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
அதன் படி உள்ளார் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த பூலித்துரை என்பவரின் மகன் காசித்துரை தலைவனார் (23), தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் முத்து கல்யாணி (22), கீழப்புதூரைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் லட்சுமணகுமார் (26), ராம்குமார்(27), சிந்தாமணிப்பேரி புதூரை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் மகன் கலை செல்வன்(19), மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் மீது காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 75,000 மதிப்பிலான 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









