புளியங்குடியில் நான்கு சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக நடந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் மூன்று பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு அவ்வப்போது மிட்டாய் வாங்கி கொடுத்து, அவரது வீட்டின் உள்ளே அழைத்து சென்று சிறுமிகளின் உடலில் உள்ள அந்தரங்க உறுப்புகளில் தவறான முறையில் தொட்டுள்ளார்.
இந்நிலையில் 05.03.24 அன்று பள்ளியில் வைத்து தலைமை ஆசிரியை ஆஜர் அணிவகுப்பின் போது, உங்களது உடலில் உங்களது வீட்டு நபர்களை தவிர யாராவது உங்கள் உடலில் கை வைத்தால் பள்ளியிலோ, அல்லது வீட்டில் உள்ள பெற்றோர்களிடமோ உடனே தகவல் சொல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கிய போது, மேற்கண்ட நான்கு சிறுமிகளும் தலைமை ஆசிரியர் அவர்களிடம் நாங்கள் வீட்டின் அருகே விளையாடும் போது காட்டு ராஜா என்பவர் எங்களது உடலில் உள்ள பகுதிகளை தொட்டதாக கூறியதால் இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியை தகவல் கூறியுள்ளார்.
பின்னர் இது குறித்து நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டத்தின் பேரில், மேற்படி காட்டு ராஜா(48) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









