இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் உலக புத்தக தின விழா..
தென்காசி மாவட்டம், இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் உலக புத்தக தின விழா கல்லூரி தாளாளர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. விழாவில், கல்லூரி முதல்வர் (பொ) தங்கம் முன்னிலை வகித்தார். நூலகர் முனைவர் ஏஞ்சலின் உலக புத்தகம் தினம் குறித்தும் மாணவ மாணவிகள் புத்தகம் வாசிப்பதின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும், வாழ்வின் உயர்நிலைக்கு செல்ல புத்தகத்தின் பலன்கள் குறித்தும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற புத்தக தின விழாவில் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு புத்தகங்கள் வாசிப்பில் ஈடுபட்டனர். இந்த விழாவில் இலஞ்சி டிடிடிஏடிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரியின் தாளாளர் ராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









