தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி ஏற்கப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் போதை தடுப்பு உறுதிமொழியினை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.
இதில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் மருத்துவர் மூலம் வழங்கப்படுவதாகவும், பொதுமக்கள் அதனை பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் மருந்தாளுனர்கள், பயிற்சி மாணவ மாணவியர்கள், மருத்துவர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், ஆய்வக நுட்புனர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.