திப்பணம்பட்டி அரசு நூலகத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா; பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்..

திப்பணம்பட்டி அரசு நூலகத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா; பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் பாரதியார் வாசகர் வட்டம் சார்பாக, பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாத கோடை கால இலவச ஆங்கில வகுப்பு மற்றும் பொது அறிவு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனர் இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவில், நூலகர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் தங்கராஜ் வரவேற்புரையாற்றினார். நூலக உதவியாளர் கனகராஜ் நன்றியுரையாற்றினார். விழாவில் வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!