ஆலங்குளம் காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி செய்த ரவுடி அதிரடி கைது..

ஆலங்குளம் காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி செய்த ரவுடி அதிரடி கைது..

ஆலங்குளம் காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி செய்த ரவுடியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட சிவலார்குளம் பகுதியில் சட்ட விரோதமாக விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில், கடந்த 29.05.24 ஆம் தேதி அன்று சிவலார்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன்களான மகேஷ்(25), கஜேந்திரன்(22), பெர்லின்(24) மற்றும் மரிய சுந்தரம் என்பவரின் மகனான நவீன் (27) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், 29.05.24 ஆம் தேதி இரவு நேரத்தில் ஆலங்குளம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர்களான தங்கதுரை மற்றும் ஜான்சன் ஆகியோர் இரவு நேர ரோந்து பணியில் இருந்த போது அங்கு வந்த மேற்கண்ட கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் அண்ணனான கல்யாண சுந்தரம் மற்றும் அவரின் நண்பரான நிர்மல் ஆகியோர் சேர்ந்து பணியிலிருந்த காவல் துறையினரிடம் பிரச்சனை செய்து, அவர்களை அரிவாளால் தாக்க முயற்சி செய்தும் காவலரின் இருசக்கர வாகனத்தை அரிவாளால் சேதப்படுத்தியும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், சிவலார்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரின் மகனான கல்யாணசுந்தரம் (27) என்ற குற்றவாளியை அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் தலைமறைவாக உள்ள சங்கர பாண்டியன் என்பவரின் மகனான நிர்மல்(28) என்ற குற்றவாளியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!