புதிய வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு..

தென்காசி மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் பொறுப் பேற்று கொண்டார். முன்னதாக தென்காசி மாவட்ட வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த லாவண்யா அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தென்காசி புதிய வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தென்காசி உட்கோட்ட நிர்வாக நீதிபதி மற்றும் வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் 11.08.2025 அன்று பொறுப் பேற்றுக் கொண்டார். புதிய கோட்டாட்சியருக்கு அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!