காவலர்களுக்கு கீழை நியூஸ் பாராட்டு..

விபத்து ஏற்படும் முன் பேரிகார்டு தடுப்பை முறைப்படுத்திய தென்காசி மாவட்ட காவல் துறையினரை கீழை நியூஸ் செய்தி நிறுவனம் பாராட்டுகிறது. தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில், (இ.விலக்கு ரவுண்டானா அருகில்) வைக்கப்பட்ட பேரிகார்டு விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் சாலையில் விழுந்து காணப்படுகிறது என்றும், விபத்து ஏற்படும் முன் பேரிகார்டு முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கீழை நியூஸில் 06.06.2025 அன்று செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி சமூக ஆர்வலரால் தென்காசி மாவட்ட காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், தென்காசி இ.விலக்கு பகுதியில் கீழே விழுந்து ஆபத்தான நிலையில் காணப்பட்ட பேரிகார்டு காவல்துறை மூலம் சில மணி நேரங்களில் விரைவாக முறைப்படுத்தப்பட்டது. விரைவான நடவடிக்கை மூலம் விபத்தை தவிர்த்து பேரிகார்டு தடுப்பை முறைப்படுத்திய தென்காசி மாவட்ட காவல் துறையின் செயல்பாட்டை கீழை நியூஸ் செய்தி நிறுவனம் பாராட்டுகிறது. காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்.

 

-கீழை நியூஸ் செய்தி நிறுவனம்

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!