இராமநாதபுரம், ஆக.27 –
இராமநாதபுரம் அருகே பெரிய அக்கிரமேசி ஸ்ரீ வாலேஸ்வரி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு கோயில் வளாகப் பகுதியில் பூஜகர் மனோகர குருக்கள் தலைமையில் வேத விற்பன்னர்கள் யாக பூஜை நடத்தினர். இதையடுத்து ஸ்ரீ வாலேஸ்வரி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகை அபிஷேக, ஆராதனை நடந்தன. விநாயகர், சோனையா சுவாமி, கருப்பணசுவாமி, இருளப்பசுவாமி, ராக்கச்சி அம்மன், வீரமாகாளி, இருளாயி அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தன.
சிறப்பு யாக பூஜையில் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பாக இருக்கவும் இன்னும் பல சாதனைகள் படைக்கவும் இறைவனுக்கு நன்றி தெரிவித்தும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கல்வி வேலை வாய்ப்பு பெருகவும், அனைவரும் சுபிட்சமாக வாழவும் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தது. வருஷாபிஷேக விழாவில் மதுரை, கோவை, திருச்சி, விருதுநகர், தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை, பரமக்குடி, கீழக்கரை, திருப்புல்லாணி, அக்கிரமேசி, இரட்டையூரணி, பால்குளம், கே-வலசை பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீவாலேஸ்வரி அம்மன் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









