வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அரியூர் மலைக் கோடியில் உள்ள ஸ்ரீபுரம் தங்க கோவில் சக்தி அம்மாவின் 43-வது ஜெயந்தி விழா நடைபெற்றது. காலை 10 மணியளவில் ஸ்ரீ நாராயணி வித்யாலயாவில் இருந்து நாராயணி பக்த சபா சார்பில் வரிசை தட்டுகளுடன் ஆன்மிக ஊர்வலம் நடந்தது.
பல்வேறு கலைநிகழ்ச்சிக்கு பின்பு சக்தி அம்மாவுக்கு மலர் அபிஷேகம் பாதை பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து சக்திஅம்மா அருளாசி வழங்கினார் இதில் கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரகாண்ட் கவர்னர்கள் பங்கேற்று அருளாசி பெற்றனர். மேலும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் அருளாசி பெற்றனர்


You must be logged in to post a comment.