தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: வெளியானது அறிவிப்பு!
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில தொழில்நுட்பக் கல்வித்துறை சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில், ”சுருக்கெழுத்து அதிவேக (ஹை ஸ்பீடு) தேர்வு பிப்ரவரி 15 மற்றும் 16ம் தேதியும் சுருக்கெழுத்து இளநிலை, இடைநிலை முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 22 மற்றும் 23-ம் தேதியும், கணக்கியல் இளநிலை, முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 24ம் தேதியும், தட்டச்சு இளநிலை, முதுநிலை அதிவேக தேர்வுகள் மார்ச் 1 மற்றும் 2ம் தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு டிசம்பர் 16ம் தேதி தொடங்கியுள்ளது.
விண்ணப்பதாரர்கள் www.,tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 17ம் தேதி ஆகும். அதன் பிறகு ஜனவரி 19ம் தேதி வரை அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பத்தில் ஜனவரி 19 முதல் 21ம் தேதிக்குள் திருத்தம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.